புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வில் தையல் தொழிலாளி மகன் 489 மதிப்பெண்ணும், ஆட்டோ டிரைவரின் மகள் 487 மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்றையை தினத்தை பரப்பரப்பான தினமாக மாற்றியுள்ளது. மகிழ்ச்சி, கண்ணீர், ஆதங்கம், பரவசம் என பலதரப்பட்ட உணர்ச்சிகளை தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவ- மாணவிகளிடம் காண முடிந்தது. மாநில அளவில் முதலிடம், பள்ளியளவில் முதலிடம் என்று பலரும் பரபரத்து கொண்டிருக்கும் வேளையில் படிப்பதற்கே வசதியில்லாமல் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களிலிருந்து முதல் தலைமுறை பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறும் போது அவர்களை சந்திக்கும் நமக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்றையை தினத்தை பரப்பரப்பான தினமாக மாற்றியுள்ளது. மகிழ்ச்சி, கண்ணீர், ஆதங்கம், பரவசம் என பலதரப்பட்ட உணர்ச்சிகளை தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவ- மாணவிகளிடம் காண முடிந்தது. மாநில அளவில் முதலிடம், பள்ளியளவில் முதலிடம் என்று பலரும் பரபரத்து கொண்டிருக்கும் வேளையில் படிப்பதற்கே வசதியில்லாமல் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களிலிருந்து முதல் தலைமுறை பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெறும் போது அவர்களை சந்திக்கும் நமக்கும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

‘‘ நான் சின்ன வயசிலிருந்தே தனியார் பள்ளியில தான் படிச்சேன். அஞ்சாவது வகுப்பு வரை அங்க தான் படிச்சேன். அப்பா தையல் தொழிலாளி. வருமானம் எல்லா நேரத்திலும் கிடைக்காது. அப்பாவால பீஸ் கட்ட முடியல. அதனால ஆறாவது வகுப்பிலிருந்து ஜீவானந்தம் அரசு பள்ளியில படிக்க ஆரம்பிச்சேன். லீவ் கிடைக்கும் போதெல்லாம் அப்பாவுக்கு கடையில் ஒத்தாசையா வேலை செய்வேன். அவரு வேணாம்னு போய் படிக்குற வேலைய பாருன்னு சொல்வாரு. இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. டாக்டர் ஆகணும்னு ஆசை. அதுமட்டுமில்லாம ஐ.ஏ.எஸ்-க்கு படிக்கணும்னு ஆசை. என்னோட எதிர்காலம் இந்த இரண்டு துறையை சார்ந்து தான் இருக்கும். தினமும் காலையில் 5 மணியிலிருந்து 7 மணி வரைக்கும் படிப்பேன். அதே மாதிரி சாய்ந்திரம் ஸ்கூல் விட்டு வந்த உடனே 5 லிருந்து 11 மணி வரைக்கும் படிப்பேன். அப்படி படிச்சதால தான் என்னால இவ்வளோ மார்க் எடுக்க முடிஞ்சது ’’ என்றார் பூரிப்போடு.
கார்த்திக்கின் தந்தை பாலசுப்பிரமணியிடம் பேசினோம், ‘‘ நான் செய்யுறது தையல் தொழில் தான். ஆனா, என் பிள்ளையோட கனவு எவ்வளவு பெருசா இருந்தாளும் அதை கண்டிப்பா நிறைவேத்துவேன். மாநில அளவில முதல் இடம் வருவான்னு எதிர்பார்த்தது. அதுதான் எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு. இருந்தாளும் என் பையன் எனக்கு பெருமை தேடிக் கொடுத்துட்டான் ’’ என்று அன்போடு கார்த்திக்கை அணைக்கிறார் அவர்.
‘‘கார்த்திக் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டு, ஓவியம், பேச்சு போட்டி என அனைத்திலும் படு சுட்டி’’ என்று பாராட்டுகின்றனர் கார்த்திக்கின் ஆசிரியர்கள்.
ஆட்டோ ஓட்டுனரின் மகள் :

கார்த்திக்கைப் போலவே திருவள்ளுவர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சசிப்பிரியாவும் 487 மதிப்பெண்கள் எடுத்து சாதித்து காட்டியுள்ளார். சசிப்பிரியாவின் தந்தை ரமேஷ் ஆட்டோ ஓட்டுனர். சசிப்பிரியாவின் சாதனை குறித்து அவரிடம் பேசினோம்,
‘‘ நான் ரொம்ப நேரலாம் படிச்சது கிடையாது. ஆனா, படிக்கும் போது மட்டும் கவன சிதறல் எதுவுமில்லாமல் தெளிவா படிப்பேன். படிக்குறது கொஞ்சமா இருந்தாளும் மனசுல நல்ல பதியுற மாறி படிப்பேன். ஒன்பதாவது வகுப்பு வரை தனியார் பள்ளியில தான் படிச்சிட்டு இருந்தேன். அப்பாவால அங்க பீஸ் கட்டமுடியாததால அரசு பள்ளியில சேர்ந்தேன். அங்கிருக்குற ஆசிரியர்கள் ரொம்பவே என்மேல அக்கறை எடுத்து பாடங்களை சொல்லிக் கொடுத்தாங்க. அதே சமயம் புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில ‘ சிகரத்தை நோக்கி ’ னு நிகழ்ச்சி நடத்துனாங்க. அதெல்லாம் அதிகமா மார்க் வாங்க உதவியா இருந்துச்சு. எதிர்காலத்துல மருத்துவம் படிக்கணும்னு ஆசை. ’’ என்றார் அவர்.
ஆட்டோ ஓட்டுனரான சசிப்பிரியாவின் தந்தை ரமேஷிடம் பேசினோம், ‘‘ எங்க குடும்பத்துல சசிபிரியா தான் முதல் தலைமுறை படிப்பில பெரிய சாதனைலாம் பண்ணிருக்க. மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு. எதிர்காலத்துல என்ன படிப்பு விரும்புதோ அதை நான் நிறைவேத்தி வைப்பேன். ரொம்ப சந்தோஷமா இருக்குங்க ’’ என்றார் நிறைவாக.
‘‘ நான் ரொம்ப நேரலாம் படிச்சது கிடையாது. ஆனா, படிக்கும் போது மட்டும் கவன சிதறல் எதுவுமில்லாமல் தெளிவா படிப்பேன். படிக்குறது கொஞ்சமா இருந்தாளும் மனசுல நல்ல பதியுற மாறி படிப்பேன். ஒன்பதாவது வகுப்பு வரை தனியார் பள்ளியில தான் படிச்சிட்டு இருந்தேன். அப்பாவால அங்க பீஸ் கட்டமுடியாததால அரசு பள்ளியில சேர்ந்தேன். அங்கிருக்குற ஆசிரியர்கள் ரொம்பவே என்மேல அக்கறை எடுத்து பாடங்களை சொல்லிக் கொடுத்தாங்க. அதே சமயம் புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில ‘ சிகரத்தை நோக்கி ’ னு நிகழ்ச்சி நடத்துனாங்க. அதெல்லாம் அதிகமா மார்க் வாங்க உதவியா இருந்துச்சு. எதிர்காலத்துல மருத்துவம் படிக்கணும்னு ஆசை. ’’ என்றார் அவர்.
ஆட்டோ ஓட்டுனரான சசிப்பிரியாவின் தந்தை ரமேஷிடம் பேசினோம், ‘‘ எங்க குடும்பத்துல சசிபிரியா தான் முதல் தலைமுறை படிப்பில பெரிய சாதனைலாம் பண்ணிருக்க. மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு. எதிர்காலத்துல என்ன படிப்பு விரும்புதோ அதை நான் நிறைவேத்தி வைப்பேன். ரொம்ப சந்தோஷமா இருக்குங்க ’’ என்றார் நிறைவாக.